ஞாயிறு, 27 செப்டம்பர், 2020
புதன், 23 செப்டம்பர், 2020
பெண்
ஒரு #பெண் என்பவள் #கடவுளுக்கு மேல் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.🤱🏻 👼🏻🤱🏻
எங்கோ யாரோ இருவருக்கு மகளாக பிறந்தாள் எனக்கு மனை
வியாக வந்த பின்பு அவளுக்கென்று இருந்த ஆசைகளை கனவுகளை மறந்து விட்டாள் 👩
இப்போது நான் அழுதால் அழுகிறாள்
நான் சிரித்தால் சிரிக்கிறாள்
நான் துடித்தால் துடிக்கிறாள்
எனக்காகவே வாழ்கிறாள்
ருசியாக உணவு சமைத்து தருகிறாள்
ரகசியமாக காதல் செய்கிறாள்
காலையில் நான் எழும்புவதற்கு முன்பு
அவள் எழுந்து விடுகிறாள்
இரவில் வீடு வருவதற்க்கு தாமதம் ஆனால்
நான் வரும் வரை தூங்காமல் விழித்திருக்கிறாள்
மாதவிடாய் வலி அவளை கொல்லும் போதும்
சிரித்துக் கொண்டே என் ஆடைகள் துவைக்கிறாள் வீட்டை சுத்தம் செய்கிறாள்
அன்பாக பேசுகிறாள் அனைத்து
வேலைகளையும் சளைக்காமல் செய்கிறாள்
சில இரவுகளில் கட்டிலில் கலந்து
இனிப்பான இன்பம் தருகிறாள்
ஓர் நாள் கர்ப்பம் ஆகி விட்டேன் என
காதுக்குள் சொல்லி மார்பில் சாய்ந்தால்
பக்குவமாக குழந்தை போல் பார்த்துக் கொண்டேன்
அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றேன் ஒரு தாதிப் பெண் என்னையும் உள்ளே வர சென்னாள்.
இப்போது அவள் அருகில் நான் கத்தினால் கதறினால் ஏதேதோ செய்தால் வலியால் அவள் துடிப்பதை பார்த்து என்னால் தாங்க முடியவில்லை.
அழ வேண்டும் என்றும் நான் நினைக்க நினைக்கவில்லை
ஆனால் என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது
இந்த அன்புக்கு என்ன பெயர் என்று
எனக்கு தெரியவில்லை
சதை கிழிந்து குழந்தை வெளியில் வரும் போது
அவள் அடைந்த வலியை கடவுள்
கூட கவிதையில் சொல்லிவிட முடியாது
பாதி குழந்தை வெளியில் வந்திருகையில்
வலி தாங்க முடியாமல் கைகள் இரண்டையும் எடுத்து கும்பிட்டு அழுதால் எவ்வளவு வலி இருந்தால் அவள் கும்பிட்டு அழுதிருப்பால் என்று நினைக்கும் போது
நான் துடிதுடித்து அவளை இருக அணைத்து கொண்டேன் ஒரு பெரிய சத்தமிட்டு மயங்கி சாய்ந்தால்.❀ஷ•ரு❀
ஒரு சில நிமிடங்களில் குழந்தையை கையில் கொடுத்தார்கள்.
நான் அவள் நெற்றியில் முத்தம் வைத்து
இருக அணைத்து கொண்டேன்
அவள் அனுபவித்த வலி என்பது
நிச்சயமாக மரணத்தின் ஒத்திகை
என்று உணர்ந்தேன் 💫🌹
மரியாதை செய்யுங்கள் எம் இறைவிகளுக்கு
நான் நேசிக்கும் மனைவிக்காகவும்
நான் நேசிக்கும் அம்மாவுக்காகவும்
இந்த உலகிழ் வாழும் பெண்களுக்காகவும்
இந்த வரிகளை சமர்ப்பிக்கிறேன்.
நன்றிகள் கோடி பெண்களே...💓
மகிழ்வித்து மகிழுங்கள் மிக்க மகிழ்ச்சி🍁🍃
வியாழன், 17 செப்டம்பர், 2020
சந்தேகம்
*மனைவிக்கு திடீர் சந்தேகம் வந்தது*
தன்னுடைய கணவனுக்கு
காது கேட்கவில்லையோ என்று?
ஆனால்... இதை கணவணிடம்
நேரடியாகக் கேட்க அவருக்குத் தயக்கம்,
தயக்கம் என்ன...??? *பயம்தான்...*
இந்த விஷயத்தை அவரின் உறவுக்கார டாக்டருக்கு தெளிவாக விளக்கி ஒரு கடிதம் எழுதினார்....
டாக்டரிடம் இருந்து வந்த பதிலில்...
"இருபது அடி தூரத்தில் இருந்து கணவரிடம் ஏதாவது பேசிப் பாருங்கள்,...
கணவரின் காதில் விழவில்லை எனில்....
சற்று நெருங்கி பதினைந்து அடி தூரத்தில் இருந்துப் பேசுங்கள்,
பின் பத்து, ஐந்து இப்படி குறைத்துக் கொண்டே நெருங்கிச் சென்றுப் பேசுங்கள்.
எத்தனை அடி தூரத்தில் இருந்து பேசினால் கணவருக்கு காதுக் கேட்கவில்லை எனத் தெரிந்தால் அதற்கேற்றபடி சிகிச்சை அளிக்கலாம்" என்றிருந்தது.
அதைக் பார்த்தவுடன் மனைவிக்கு ஒரே *குஷி.*
வீட்டு வாசலில் இருந்தபடியே உள்ளிருந்த கணவரிடம்...
இன்று மகனுக்கு பள்ளி கட்டணம் கட்டியச்சா னு? எனக் கேட்டாள்.
பதில் எதுவும் இல்லை...
பின் வீட்டு வரவேற்பறையில் இருந்து அதே கேள்வியைக் கேட்டாள். அதற்கும் பதில் இல்லை,
ஹாலில் இருந்து கேட்டாள்,
சமையலறை வாசலில் இருந்தும் மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள். .
கணவரிடமிருந்து பதிலே இல்லை.
போச்சு *இரண்டு ஸ்பீக்கரும் அவுட்* ஆகிவிட்டதுபோல .
என்று மனதில் கன்ஃபார்ம் செய்து விட்டார்.
கடைசி வாய்ப்பாக கணவனின் காது அருகே சென்றுச் சத்தமாக....
*"இன்னைக்கு பையனுக்கு Fees கட்டியச்சா?"* எனக் கேட்டாள்.
காதில் ஏதோ குண்டு வெடித்தது போல் இருக்கவே அவளின் கணவன் அவளை கோபமாக திரும்பிப் பார்த்து,
”என்டீ இப்படி கத்துற, நீ வாசல் கேட்டிலிருந்து , வரவேற்பறையில் இருந்து,
ஹாலில் இருந்து, சமைலறை வாசலில் இருந்து கேட்க, கேட்க நானும் கட்டியச்சு கட்டிச்சு னு சொல்லிக்கிட்டே இருந்தேனே,
அது உன் காதில் விழவில்லையா?
*காதுல என்ன பஞ்சு மூட்டையா வைச்சிருக்க...?,?* எனப் பொரிந்துத் தள்ளிவிட்டான்...
மனைவி அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றாள்.
*தவறு தன்னிடம் தானா?*
*கதையின் நீதி*:-
இப்படித்தான் பலர் பிரச்சனையை நம்மிடம் வைத்துக் கொண்டு...
அது பிறரிடம் இருப்பதாக நினைத்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்…
என்ன விசித்திரம்!!!
இந்தப் பதிவு *சிரிக்க மட்டும் அல்ல, சிந்திக்கவும்கூடத்தான்.*..
ஞாயிறு, 13 செப்டம்பர், 2020
எது? எதனால்?கெடும் ?
*எது? எதனால்?கெடும் ?*
01) பாராத பயிரும் கெடும்.
02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
03) கேளாத கடனும் கெடும்.
04) கேட்கும்போது உறவு கெடும்.
05) தேடாத செல்வம் கெடும்.
06) தெகிட்டினால் விருந்து கெடும்.
07) ஓதாத கல்வி கெடும்.
08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
09) சேராத உறவும் கெடும்.
10) சிற்றின்பன் பெயரும் கெடும்.
11) நாடாத நட்பும் கெடும்.
12) நயமில்லா சொல்லும் கெடும்.
13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
15) பிரிவால் இன்பம் கெடும்.
16) பணத்தால் அமைதி கெடும்.
17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
18) சிந்திக்காத செயலும் கெடும்.
19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
20) சுயமில்லா வேலை கெடும்.
21) மோகித்தால் முறைமை கெடும்.
22) முறையற்ற உறவும் கெடும்.
23) அச்சத்தால் வீரம் கெடும்.
24) அறியாமையால் முடிவு கெடும்.
25) உழுவாத நிலமும் கெடும்.
26)உழைக்காத உடலும் கெடும்.
27) இறைக்காத கிணறும் கெடும்.
28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
30) இரக்கமில்லா மனிதம் கெடும்.
31) தோகையினால் துறவு கெடும்.
32) துணையில்லா வாழ்வு கெடும்.
33) ஓய்வில்லா முதுமை கெடும்.
34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
35) அளவில்லா ஆசை கெடும்.
36) அச்சப்படும் கோழை கெடும்.
37) இலக்கில்லா பயணம் கெடும்.
38) இச்சையினால் உள்ளம் கெடும்.
39) உண்மையில்லா காதல் கெடும்.
40) உணர்வில்லாத இனமும் கெடும்.
41) செல்வம்போனால் சிறப்பு கெடும்.
42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
43) தூண்டாத திரியும் கெடும்.
44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
45) காய்க்காத மரமும் கெடும்.
46) காடழிந்தால் மழையும் கெடும்.
47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.
48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.
49) வசிக்காத வீடும் கெடும்.
50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.
51) குளிக்காத மேனி கெடும்.
52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.
53) பொய்யான அழகும் கெடும்.
54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
55) துடிப்பில்லா இளமை கெடும்.
56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
57) தூங்காத இரவு கெடும்.
58) தூங்கினால் பகலும் கெடும்.
59) கவனமில்லா செயலும் கெடும்.
60) கருத்தில்லா எழுத்தும் கெடும்
தெரிந்து கொண்டீர்களா ?.
கெடாமல் பாதுகாக்க வேண்டியது
அவரவர் பொறுப்பு
வியாழன், 10 செப்டம்பர், 2020
அம்மா
*தாயிற்சிறந்தகோவிலுமில்லை*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
"அமெரிக்காவில் மிகப்பெரிய பணக்காரர் அவர்..... தன் தாயின் பிறந்தநாளுக்கு பரிசளிக்க ....ஒரு பெரிய கடையின் முன், தன் காரை நிறுத்துகிறார்.
பிரபலமான பூக்கடை அது ,..."
எவ்வளவு விலை சார் இது"
" 250 டாலர்"!!.
" இதைவிட அருமையான 'பூ 'காண்பிக்க முடியுமா?
"வந்தவர் மிகப்பெரிய பணக்காரர் என கடைக்காரருக்கு தெரிகிறது....
" இது "ஆர்கிட்"வகைப் பூ...மிகஅருமையா இருக்கும்.... ஒரு வாரம் வரை வாடாது"
"500 டாலர்"!!
சரி, இதையே , 'பேக் செய்யுங்க...
"உங்களிடம், "கொரியர்" சர்வீஸ் இருக்கா?
கொரியர் சர்வீஸ்'சும், செய்கிறோம் ...அதற்கு ஒரு 100 டாலராகும்.
"வேண்டாம்... இந்த பூங்கொத்து இன்று என் தாயிடம் போய் சேர வேண்டும் இன்று என் தாயின் பிறந்தநாள் கொரியர் சர்வீஸ்' பல காரணங்களுக்காக தாமதமாகலாம் எனக்கு இன்றே போகணும்....
ஒன்று செய்யுங்க.....' ஒரு காரும் டிரைவரும், ஏற்பாடு செய்து ...இந்த பூங்கொத்தை,இன்றே என் தாயிடம் ,இந்த அட்ரஸ் சில் சேர்த்திடுங்க.
"ஓகே சார், இப்பவே ஏற்பாடு செய்கிறேன் இன்றே போய் சேர்ந்துவிடும்.... அதற்கும் சேர்த்து 500 டாலர்.
" நோ ப்ராப்ளம் பணத்தையும், அம்மாவின்,வீட்டு அட்ரஸ் கொடுத்து விட்டு நகர்ந்தார் அந்த பணக்காரர். மனம் முழுக்க மகிழ்ச்சி, தன் பிஸி நேரத்திலும், தன் அம்மாவின் பிறந்தநாளை மறக்காமல் ,பூங்கொத்து அனுப்பி விடுகிறோம் என சந்தோஷத்துடன் காரை காரில் ஏறப் போக.....
ஒரு சின்ன சிறுமி ஒரு ஐந்து ஆறு வயது இருக்கும் அழுதபடி இருக்கிறாள்....." குழந்தை ஏன் அழறே?
" அங்கிள் , எனக்கு ஒரு டாலர் பணம் தர முடியுமா ?
ஓகே, ஒரு டாலர் தானே தரேன் எதற்குப் பணம்? ஏன் அழுகிறாய்? ஏதாவது தொலைத்து விட்டாயா?
'நோ அங்கிள் " எங்க அம்மாவின் பிறந்தநாள் அங்கிள் இன்று ...
நான் வருடா,வருடம் அம்மாவின் பர்த்டே க்கு, அம்மாவுக்கு பிடித்த ஒரு ரோஜா பூ வாங்கித் தருவேன் என்று அம்மாவின் பிறந்தநாள்...என்னிடம்
பணம் இல்லை......நீங்க ஒரு டாலர்
கொடுத்தால் ஒரு ரோஜா பூ வாங்கி அம்மாவிற்கு கொடுப்பேன்.
அம்மா எனக்காக வெயிட் டிங்'.... ப்ளீஸ் அங்கிள் ஒரு டாலர் தரமுடியுமா?
" பாவம் ஏழை பெண் அவள்....." ஒரு டாலர் என்னமா!.... 10 டாலர் தரேன் எடுத்துக்கோ ...
"வேண்டாம் அங்கிள், ஒரே ஒரு டாலர் போதும்.... என ஒரு டாலரை மட்டும் எடுத்துக்கொண்டு 'சிட்'டாக பறந்தாள் அச் சிறுமி.
ஏதோ சாக்லேட் வாங்க தான் அப்படி ஒரு டாலர் கேட்கிறாளோ? என நினைத்து அந்த பணக்காரர் மெதுவாக காரை அவள் செல்லும் இடம் நோக்கிச் செலுத்த சொன்னார் டிரைவரிடம்.
.ஒரு சின்ன பூக்கடையில் ஒரு டாலர் கொடுத்து ஒரு சிகப்பு ரோஜா பூ வாங்க .....கடைக்காரர் அதை அழகாக பேக் செய்து கொடுக்கிறார்.
மிகுந்த சந்தோஷத்துடன், அச்சிறுமி' பூ வை எடுத்தபடி ஓட ....அச் சிறுமி எங்கு போகிறாள்?... எந்த வீடு?.. தாய் யார்? என அறிய டிரைவரிடம் காரை சிறுமியின் பின்னால் போக சொல்லுகிறார்.
சிறுமி, பல தெருக்களைக் கடந்து ஓடுகிறாள்.... அவளுக்கு தெரியாமல் அவளைப் பின் தொடர்கிறது கார்..
பல வளைவுகளை,தெருக்களை கடந்து,ஓடும் அவள்......போய் நிற்கும் இடம் சமாதி........ ஒரு கல்லறையின் அருகில் போய் நின்று, ரோஜா பூவை வைத்து.... "அம்மா, 'ஹாப்பி பர்த்டே' உனக்கு மிகப் பிடித்த ரோஜா பூ நான் வாங்கிட்டு வந்துட்டேன் மா ....என கூறி அம்மாவின் கல்லறையில் வணங்கி.... முத்தமிட ,....பார்த்துக்கொண்டிருந்த பணக்காரர்களில் கரகரவென நீர் சுரந்தது .
"சார் , 'மீட்டிங்கிற்கு, நேரமாச்சு... டிரைவர் அவசரப்படுத்த, கண்ணை துடைத்த படி அவசர அவசரமாக காரில் ஏறி, கடைக்கு போய், தான் வாங்கி வைத்த பூங்கொத்ததை, எடுத்துக்கொண்டு வண்டியை,வீட்டிற்கு போக சொன்னார்.
"பெரிய கார் ,தன் வீட்டின் முன் நிற்பதை பார்த்த .....92 வயதுடைய தாய் கண்ணை சுருக்கி," யாரது ?என பார்க்க ....
"அம்மா என அழைத்தபடி பூங்கொத்தை கொடுத்து.... "பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா "என
காலில் விழுந்த, மகனை ஆரத் தழுவிய தாய்......
" உனக்கு இருக்கும் எக்கச்சக்க வேலையில், ஏம்பா நீ வந்தே!!!!
" அம்மா ,"அன்பை எப்படி வெளிப் படுத்துவது, என ஒரு சிறுமியிடம் நான் கற்றேன்.
" உயிரோடு இல்லாத தன் தாய்க்கு அச் சிறுமி எப்படி பூங்கொத்தை கொடுத்து அன்பை வெளிப்படுத்தினாள்.....நெகிழ்ந்து விட்டேன்... ஆனால் நான்?...அச் சிறுமியின் மூலமாக அன்பை, எப்படி வெளிப் படுத்துவது என அறிந்தேன்
"உயிரோடு இருக்கும், என் தாய்க்கு நேரில் வந்து வாழ்த்து,பார்த்து, வாழ்த்து பெறுவதை விட பெரும் பாக்கியம் எனக்கு ஏது?...மகனை கட்டி அணைத்து முத்தமிட்டாள் அத் தாய்.
" தாய், தந்தை இருப்பவர்கள்.....அவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை, அன்பை, வாரி வழங்க தவறாதீர்கள்....அன்பை வெளிப்படுத்த மறக்காதீர்கள்.
உங்களின்,உங்கள் பண்பின்,அன்பை நினைத்து,மகிழ்ந்து.... ஒரு சொட்டு கண்ணீர் உங்கள் தாயின் கண்களில் இருந்து வந்தால்.....உங்கள் வாழ்க்கை சிறக்கும்.....
எல்லா தாய்க்கும் தன் பிள்ளைகளின் மகிழ்ச்சி,உயர்வு என்றும் சந்தோஷம்
"சந்தோஷத்தில்,...மகிழ்ச்சியில், எல்லா தாயின் கண்களிலும் ஆனந்த கண்ணீர் தான் சுரக்கும்......🤷♂️
ஞாயிறு, 6 செப்டம்பர், 2020
காணாமல் போகும் உறவுகள்...!"*
💐💐💐🌹🌹🌹 🙏 🌹🌹💐💐
*இன்றைய சிந்தனை ( 07.09.20 )*
............................................................
*''காணாமல் போகும் உறவுகள்...!"*
.............................................................
இன்றைய நவீன உலகத்தில் மனித உறவுகள் சிதைந்து விஞ்ஞானத்தோடு உறவு வளர்ந்து வருகிறது. இன்றைய உலகில் மனிதர்களுக்கு உறவுகள் தேவையில்லை...
மாறாக திறன்பேசி (SMART PHONE) இருந்தால் போதும் என்ற மன நிலையில் வாழ்ந்து வருகிறோம்...
ஆக!, மனித உறவுகள் இன்று ஊதாசினப்படுத்தப்பட்டு வருகின்றன என்பதே உண்மை...
பெற்ற பிள்ளைகளோடும், உற்றார் உறவினர்களோடும், சிரித்து மகிழ்ந்து உறவாடிய நாட்கள் போய், இன்று உறவுகள் களைந்து, குடும்பங்கள் சிதைந்து, பிள்ளைகளை மறந்து, கணிணியும், அலைபேசியும் இருந்தால் போதும் என்று நிலையில் வாழ்ந்து வருகிறோம்...
இது ஒருபுறம் இருக்க, இனி வரும் காலங்களில் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், சின்ன அக்கா, பெரிய அக்கா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான், மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார், தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு, பெரியப்பா பையன், பெரியப்பா பொண்ணு, அத்தை பையன், அத்தை பொண்ணு, மாமன் பொண்ணு, மாமன் பையன்... இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050 மேல் யாருடைய காதிலும் விழாது...
எவரும் அப்படிக் கூப்பிடவும் மாட்டார்கள், அகராதியில் இருந்து கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விடும்...
காரணம்...!
நகரவாழ் பெரியோர்கள் கூறுவதுபோல "ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு" என்று ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்ததுதான்...! அப்படி இருக்கும்போது இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும்...?
கட்டிக் கொடுத்த பெண்ணுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அண்ணனும் தம்பியும் பறந்து செல்வார்கள், இனி யார் போவார்கள்...? ஒவ்வொரு பெண்ணும், சொந்தபந்தம் ஏதுமின்றி ஆறுதலுக்கு ஆள் இன்றி தவிக்கப் போகிறார்கள்...
ஒவ்வொரு ஆணும் தன் இன்ப துன்பங்களில் பங்கு கொள்ள அண்ணன், தம்பி யாருமின்றி அவதிப்பட போகிறார்கள், அப்பா அம்மாவைத் தவிர எந்த உறவுகளும் இருக்கப் போவதில்லை...
அந்த ஒரு குழந்தையும் வெளியூருக்கோ, இல்லை தனிக்குடித்தனமோ சென்றுவிட்டால்...?
"ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு" என்று வளர்த்தவர்கள் எல்லாம் வயதான காலத்தில், ஏனென்று கேட்க நாதியற்று முதியோர் இல்லத்திலோ, இல்லை!, அந்த ஒரு குழந்தைக்காக கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக கிடந்து சாவார்கள்...!
உறவுகளின் உன்னத மதிப்பை உணராமல் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு
ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம் என வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் இதே நிலைதான்...!
உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் ஓடோடி வந்து இனி யார் வரப்போகிறார்கள்...?
*ஆம் நண்பர்களே...!*
*வாகனங்கள், வீட்டு வசதி வாய்ப்புகளுடன் ''ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு'' என்ற பெயரில் உறவுகளற்ற ஒரு அனாதையை வளர்ப்பதற்கும், வயதான காலத்தில் நாதியற்று சாவதற்குமா...? இவ்வளவு பாடுபட்டு ஓடி ஓடி செல்வம் ஈட்டுகிறீர்கள்...?*
*ஒரே ஒருமுறை நம் கடைசி காலத்தை நினைத்துப் பார்ப்போம்...!*
*பணமில்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்வதில்லை, ஆனால்!, உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதைதான் என்பதை மறந்து விடாதீர்கள்...!!*✍🏼🌹
நோய்களைப் பெருக்கும் மனநிலைகள்..!!*
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
*💗இன்றைய சிந்தனை...*
*நோய்களைப் பெருக்கும் மனநிலைகள்..!!*
"நம் உடலில் உள்ள செல்கள் நம் எண்ணங்களை சதா ஒட்டுக் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. நம் எண்ணங்களால் அந்த மாறவும் செய்கின்றன. உடலில் உள்ள ஒவ்வொரு செல்லின் மீதும் மனதின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது" என்று பிரபல மருத்துவ எழுத்தாளர் தீபக் சோப்ரா கூறுகிறார்.
அதை இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் உறுதி செய்கின்றன. நம் உடல் ஆரோக்கியத்திற்கும், நம் மனநிலைகளுக்கும் இடையே நிறையவே தொடர்பு இருக்கின்றது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. உதாரணமாக, பக்கவாதத்தினால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் தங்கள் மனதில் நிறைய துக்கத்தைஅடக்கி வைத்திருக்கிறார்கள் அல்லது மன அழுத்தத்துடன் இருந்திருக்கிறார்கள் என்பது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.
பெரும்பாலானோர் மாரடைப்புக்கு டென்ஷனான வாழ்க்கை முறை காரணமாக இருந்திருக்கிறது என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. கேன்சருக்கும் கூட கவலையும், மன உளைச்சலும் காரணமாக இருக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். தொடர்ச்சியாக இருக்கும் இது போன்ற மனநிலைகள் பெரிய நோய்களுக்குக் காரணமாக இருக்கின்றன என்றால் குறுகிய காலத்திற்கு இருக்கும் மனநிலைகள் கூட தலைவலி, வயிற்று வலி, கழுத்து வலி, இரத்த அழுத்தம் போன்ற உபாதைகளுக்குக் காரணமாக இருக்கின்றன என்கின்றன ஆராய்ச்சி முடிவுகள்.
மனநிலைகளுக்கும் நோய்களுக்கும் இடையே உள்ள தொடர்பைக் குறித்து சென்ற ஆண்டு கலிபோர்னியா-லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைகழகம் நடத்திய ஒரு பெரும் ஆராய்ச்சியில் இதன் காரணங்களை ஆழமாக ஆராய்ந்திருக்கிறார்கள். அவர்கள் கண்டுபிடித்திருக்கும் உண்மை சுவாரசியமானது. பல பக்கங்கள் கொண்ட அந்த ஆராய்ச்சியின் முடிவுகளை முடிந்த வரை எளிமையாக, சுருக்கமாக இங்கு தருகிறேன்.
ஒவ்வொரு செல்லினுள்ளும் டெலொமெர் (telemere) என்ற ஒரு நுண்ணிய கடிகாரம் உள்ளது. அது ஒவ்வொரு முறை செல் இரண்டாகப் பிரியும் போதும் மீண்டும் குறுகி சிறியதாகிறது. தான்
பெற்றிருந்த ஆரோக்கியத்திற்குத் தேவையான வழிமுறைத் தகவல்களை சிறிது இழக்கிறது. ஆனால், செல்லினுள் இருக்கும் டெலொமெரெஸ் என்ற என்சைம் (telomerase enzyme) அந்த இழப்பினை சரிசெய்து அதன் பழைய அளவினையும் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. அந்த டெலொமெரெஸின் வேலையே ரிப்பேர் செய்து செல்லையும் அதன் மூலம் உடல்நலத்தையும் நல்ல நிலையில் வைத்துக் கொள்வது தான்.
ஆனால் மன உளைச்சல், மன அழுத்தம் போன்றவை அதிகமாக எழும் போது நிலைமையை சமாளிக்க உடலில் கார்ட்டிசோல் (Cortisol) என்ற ஹார்மோனை அதிகம் தயாராகிறது. அவை அதிக காலம் இரத்த ஓட்டத்தில் தங்கும் போது டெலொமெரெஸை வேலை செய்ய அனுமதிப்பதில்லை. அதன் காரணமாக செல்களின் பிரிவினை நடந்து கொண்டேயிருக்கையில் டெலொமெர் கடிகாரத்தின் அளவும், அதனிடம் உள்ள ஆரோக்கியத்திற்குத் தேவையான வழிமுறைத்தகவல்களும் குறைந்து கொண்டே வரும் போது அதை சரி செய்யும் ரிப்பேர் வேலை நடைபெறுவதில்லை. அதனால் நோய்க்கிருமிகள் உடலைத் தாக்க ஆரம்பிக்கும் போது தடுத்துப் போராடவோ, காத்துக் கொள்ளவோ போதிய சக்தியோ, ஞானமோ செல்களில் இல்லாமல் நம் உடல் நிராயுதபாணியாக நிற்க வேண்டி வருகிறது. விளைவு பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன.
மனநலன் தொடர்ந்து சீர்கெடும் போது மனவியாதிகள் மட்டுமல்லாமல் உடல் வியாதிகளும் நம்மை ஆட்கொள்ள வருகின்றன என்பது தெளிவு. இன்றைய அவசர வாழ்க்கை முறை, சக்திக்கு மீறிய எதிர்பார்ப்புகள் மற்றும் செயல்பாடுகள், யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாத தன்மை முதலானவையே இந்த காலத்தில் நம் மனநலம் சீர்கெட அடிப்படைக் காரணங்களாக இருக்கின்றன. நம் இயல்புக்கும், சக்திக்கும் ஏற்ப முறையாக வாழ்வை அமைத்துக் கொள்ளும் போது நம் மனநலம் பெருமளவு சீர்படுகிறது.
மனநிலை ஆரோக்கியமாக இருந்தால் நோயே வராது என்பதல்ல இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சிகளின் கருத்து. வந்த நோய் வேகமாக நீங்குவதும், நிரந்தரமாகத் தங்கி விடுவதும் பெரும்பாலும் நம் மனநிலைகளைப் பொறுத்தே என்று தான் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். எனவே உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க மனதை ஆரோக்கியமாக வைத்திருப்போமாக..!!
*💗வாழ்க வளமுடன்💗*
*பகிர்வு*
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
புதன், 2 செப்டம்பர், 2020
தெருவில் படித்த பாடம்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
படித்தவை.....
*தெருவில் படித்த பாடம்..!!*
அறிஞர்களிடமிருந்து பாடங்கள் பெறுகிறோம். அறிவு சார்ந்த நூல்களில் இருந்து பாடங்கள் பெறுகிறோம். இது பெரிய விஷயமில்லை. சில சமயங்களில் தெருக்களில் கூட சில பாடங்களை, அறிஞர்களல்லாத சாதாரண மனிதர்களிடமிருந்து பெறும் சந்தர்ப்பங்கள் உண்டு. சாதாரண மனிதர்களாகத் தோன்றுபவர்களிடமிருந்து கிடைக்கும் பாடங்கள் பக்கம் பக்கமாக படிக்கும் புத்தகங்களில் இருந்தும், மணிக்கணக்கில் பேசும் அறிஞர்களிடமிருந்தும் கிடைக்கும் பாடங்களுக்கு சற்றும் குறைந்ததல்ல. இன்னும் சொல்லப் போனால் அவை மிக எளிமையாகவும் ஆழமாகவும் நம் மனதில் பதிந்து விடுவதுண்டு.
அப்படி நானும் ஒரு பாடம் படித்தேன். சில வருடங்களுக்கு முன் ஒரு நாள், உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் கோடைகால ஒரு மதிய நேரத்தில் வீட்டிற்கு வெளியே சத்தமாக எம்.ஜி.ஆர்
பாடல்களை ஒருவர் பாடுவது கேட்க ஆரம்பித்தது. சாதாரணமான குரல் தான் அது. ஆனால் உற்சாகமாகப் பாடுவது கேட்டது. ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்த்தேன்.
குப்பை எடுத்துச் செல்லும் லாரி ஒன்று சற்று தள்ளி நின்றிருந்தது. மூன்று துப்புரவு ஊழியர்கள் பெரிய குப்பைத் தொட்டியில் இருந்து குப்பைகளை கூடைகளில் எடுத்துச் சென்று அந்த லாரியில் போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பல முறை வந்து குப்பைகளை அள்ளி எடுத்துச் சென்று அந்த லாரியில் போட்டு வர வேண்டி இருந்தது. அவர்களில் ஒருவன் தான் சத்தமாக
எம்.ஜி.ஆர் பாடல்களைப் பாடியவன். மற்ற இரு ஊழியர்களும் சுரத்தே இல்லாமல் தங்கள் வேலையைச் செய்து கொண்டிருக்க இவனோ அந்த வெயிலையும், செய்யும் வேலையின் பளுவையும்
பொருட்படுத்தாமல் ஆனந்தமாகப் பாடிக் கொண்டிருந்தான்.
எனக்கு முதலில் தோன்றியது அவன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று தான். ஏனென்றால் வேறு யாரும் அந்த வெயிலில், அந்த சூழ்நிலையில் அப்படிப் பாடிக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் குரல் சாதாரணமாக இருக்கிறதே, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கூச்சமெல்லாம் இல்லாமல் அவன் பணி செய்த விதம் வித்தியாசமாக இருந்தது. அவன் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி, பாடலில் திளைத்த விதம் எல்லாம் என்னை சிந்திக்க வைத்தது.
அடிக்கும் வெயிலையோ, செய்யும் தொழிலையோ அவன் மாற்ற முடியாது. ஆனால் செய்யும் விதத்தையும், செய்யும் மனநிலையையும் அவன் தேர்ந்தெடுக்க முடியும் அல்லவா? அவன் அதைத் தான் செய்து கொண்டிருந்தான். மற்றவர்கள் வெயிலை உணர்ந்த நேரத்தில் அவன் பாடல்களின் இனிமையை உணர்ந்தான். அவர்களுக்கு வேலை நேரம் அவனுக்கு பாட்டு நேரம் ஆகியது. அதே நேரத்தில் அவன் வேலையும் நடந்து கொண்டிருந்தது. முதலில் மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று தோன்றியது போய் அவன் தான் மனநிலை சரியானவன் என்று தோன்றியது. லாரியும் அந்தப் பணியாளர்களும் சென்று நிறைய நேரம் என்னை சிந்திக்க வைத்தது அந்த சம்பவம். கல்வியறிவில்லா விட்டாலும் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்ளும் அந்த அசாதாரணமான அறிவு அவனிடம் இருந்ததாகத் தோன்றியது.
இன்னொரு நிகழ்ச்சி. 1994 ஜனவரி 17ல் நில நடுக்கத்தால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் பெரிதும் பாதிக்கப் பட்டது. இரண்டு நாட்கள் கழித்தும் அங்கு நிலைமை சரியாகவில்லை. தெருக்களைக்
வாகனங்கள் கடக்க மிக அதிக நேரம் தேவைப்பட்டது. அங்கங்கே கார்கள் மணிக்கணக்கில் நின்றிருந்தன. ஒரு பிரபல தொலைக் காட்சி சேனல் நிருபர்கள் நின்று கொண்டிருந்த கார்களின்
ஜன்னல் கண்ணாடிகளைத் தட்டி அழைத்து பயணிகளின் கருத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஒரு காரோட்டி கோபத்தின் உச்சத்தில் இருந்தார். "இந்த கலிபோர்னியா மாகாணமே மனிதர்கள் நிம்மதியாக வாழ முடியாத இடமாக மாறி விட்டது. முதலில் தீ பரவியது... பிறகு வெள்ளம்... இப்போதோ பூகம்பம். காலையில் எத்தனை சீக்கிரம் வீட்டை விட்டுக் கிளம்பினாலும் அலுவலகம் சென்று சேர தாமதம் தான் ஆகிறது. சே... என்ன தான் செய்வது?" என்று மனிதர் பொரிந்து தள்ளினார்.
அந்த நிருபர் அடுத்த காரின் ஜன்னலைத் தட்டிக் கேட்டார். அந்தக் காரோட்டி சிரித்துக் கொண்டே சொன்னார். "காலையில் ஐந்து மணிக்கே வீட்டில் இருந்து கிளம்பி விட்டேன். ஆனால் இந்த
போக்குவரத்து நெரிசலில் நான் வேலைக்குப் போய் சேர கண்டிப்பாய் தாமதம் தானாகும். ஆனால் ஐந்து மணிக்கே கிளம்பி விட்ட நான் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. அதனால் என்னை என் முதலாளி திட்ட முடியாது. அவருக்கும் போக்குவரத்து நெரிசல் தெரியும். நான் கிளம்பும் போதே படிக்க புத்தகம், கேட்க பாட்டு கேசட்டுகள், ·ப்ளாஸ்கில் காபி எல்லாம் எடுத்துக் கொண்டு வந்திருப்பதால் பிரச்னையில்லை. போய் சேர்கிற போது போய் சேர்ந்தால் போதும். அதுவரை பாட்டையும், புத்தகத்தையும் ரசிக்கலாம்."
பல பேர் கோபத்துடனும், எரிச்சலுடனும் இருக்க அந்தத் தெருவின் போக்குவரத்து நெரிசலில் அந்த மனிதர் மட்டும் பாதிக்கப்படாமல் இருந்த விதத்தை சிந்தித்துப் பாருங்கள். நிலநடுக்கமும், அதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலும் தவிர்க்க முடியாதவை. ஆத்திரப்படுவதாலோ, புலம்புவதாலோ அவற்றை மாற்றி விட முடியாது. அந்த சூழ்நிலையை ஏற்றுக் கொண்டு அதற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு வந்து அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்த மனிதர் எவ்வளவு பெரிய பாடத்தை நமக்குக் கற்றுக் கொடுக்கிறார் பாருங்கள். காத்திருக்கும் அந்த நேரத்தைக் கூட அவருக்கு மட்டும் பயனுள்ளதாய் மாற்றிக் கொண்டது புத்திசாலித்தனமே அல்லவா?
உலகில் இயற்கை நிகழ்வுகளை நாம் மாற்ற முடியாது. நம் சூழ்நிலைகள் பலவற்றையும் மாற்றும் சக்தியும் நம்மிடம் இல்லை. அழுவதாலோ, புலம்புவதாலோ, ஆத்திரப்படுவதாலோ, வேறு விதமாய் இருந்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாலோ எதுவும் மாறிவிடப் போவதில்லை. ஆனால் எதை எப்படி எடுத்துக் கொள்வது என்பது மட்டும் நம் கையிலேயே இருக்கிறது. நடப்பதை எப்படிக் காண்பது என்பதையும், எப்படி உபயோகப்படுத்திக் கொள்வது என்பதையும் நாமே தீர்மானிக்கிறோம். மேலே குறிப்பிட்ட துப்புரவுப் பணியாளரும், காரோட்டியும் பெரிய மேதைகள் அல்ல. வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெறும் சிந்தனையாளர்களும் அல்ல. ஆனால் அவர்கள் கற்றுக் கொடுக்கும் இந்தப் பாடம் மகிழ்ச்சிக்கான மகத்தான ரகசியம் அல்லவா?
*💗வாழ்க வளமுடன்💗*
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

