🍂வாழ்க்கையில் உயரும் வரை காதைப் பொத்திக் கொள்....
உயர்ந்த பிறகு வாயைப் பொத்திக் கொள்.... !!!
🍂பறவைகளின் நிம்மதியை கெடுக்க
ஒரு *கல்* போதும்.....
மனிதர்களின் நிம்மதியை கெடுக்க ஒரு *"சொல்"* போதும்......!
🍂எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு மெழுகுவர்த்தி போலத்தான்...
தூரத்தில் இருந்து பார்த்தால் ஒளி மட்டும் பிரகாசமாக தான் தெரியும்...
அருகில் சென்று பார்த்தால் தான் அவர்கள் உருகி கண்ணீர் வடிப்பது தெரியும்... !
🍂வாழ்க்கையில் முற்பகுதியில் வெற்றிபெற சுறுசுறுப்பும் ஊக்கமும் தேவை....
பிற்பகுதியில் வெற்றி பெற பொறுமையும் தன்னடக்கமும் தேவை.. !!
🍂வாழ்வில் நல்லது, நடந்தால் அதற்கு நானே காரணம் என்பதும்..
கெட்டது நடந்தால் அது மற்றவர்களால் என்றும் பிதற்றாதீர்கள்..
அனைத்திற்கும் நாம தான் காரணமென பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் ...
🍂எதையாவது கொடுத்து நல்ல பெயர் தொடர்ந்து வாங்க நினைத்தால் ... அதை கொடுக்கும் வரைதான் நிலைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்....
🍂ஆறுதல் என்பது பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு...
மாறுதல் என்பதே என்றும் நிரந்தர தீர்வு...
*நல்லதே நினைப்போம் .*
*நல்லதே நடக்கும்.*🙏🏼
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக